புதுப்பேட்டை, சாமி, விருமாண்டி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் "பாலா சிங்". அவதாரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான , 67 வயது ஆகிய பாலா சிங், சில நாட்களுக்கு முன் கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு ஆளானார்.

தற்போது இவர் உடல்நிலை மோசமானதை கருதி இவரை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.இச்செய்தியை அறிந்து திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகம் நிலவியுள்ளது .

சமீபத்தில் இவர் நடித்து வெளியான என்.ஜி.கே மற்றும் மகாமுனி படங்களில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களினிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவரது உடல்நிலை சீராகி ,பூரணகுணம் அடைந்து மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று கலாட்டா சார்பாக வேண்டுகிறோம்.