தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கி வருகிறார் மணி ரத்னம்.

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.

சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்த படத்தின் முக்கிய அப்டேட் வரும் வாரத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் ஒரு அசத்தலான மோஷன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் டீஸர் இந்த வாரம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்த அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடவுள்ளார்கள்.

Look out! Brace yourself.
Get ready for an adventure filled week!
The Cholas are coming! #PS1 🗡 @LycaProductions #ManiRatnam pic.twitter.com/uLYPJ4Z0LC

— Madras Talkies (@MadrasTalkies_) July 2, 2022