காலம் காலாமாக ட்விட்டருக்கு தனி மவுசு இருப்பதற்கு காரணம் நட்சத்திரங்களும் அதில் அதிகமாக பயனாளர்களாக இருப்பது தான். நிறைய சமயங்களில் நட்சத்திரங்கள் பிரபலங்கள் நேரடியாக ரசிகர்களிடம் கலந்துரையாடுவது அதிகம் ட்விட்டரில் தான் நிகழும் முன்னதாக முக்கிய பிரபலங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் ப்ளு டிக் என்ற அன்கீகரிகப்பட்ட கணக்கு என்ற முறைப்படி கொடுத்து வந்தது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் தொழிலதிபருமாகிய எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதன் முதன்மை மேலாளாராக இருந்து வருகிறார். வழக்கம் போல் எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திலும் புது புது திட்டங்களை அமல் படுத்தினார். பழைய தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. ட்விட்டரில் ப்ளு டிக் அங்கீகாரத்திற்கு மாத சந்தா கொடுப்பது என்று நிறைய திட்டங்களையும் வரையறையும் அதிரடியாக அமல்படுத்தினார். சமீபத்தில் கூட ட்விட்டரின் நீல நிற பறவை லோகோவை Dogge எனப்படும் நாய் லோகோவை மாற்றி அதிருப்தி ஏற்படுத்தினார்.

இந்த செயல்கள் ட்விட்டர் பயனாளர்களை தொடர்ச்சியாக எரிச்சலூட்டி வந்தது. இன்னிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான திரிஷா, ஜெயம் ரவி ஆகியோரின் கணக்கிலிருந்து ட்விட்டர் நிறுவனம் ப்ளு டிக்கை நீக்கியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்திற்காக படத்தில் நடித்த நடிகர்கள் தனித்துவமான விளம்பர பணியை மேற்கொண்டது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள தங்களது கதாபாத்திரங்கள் பெயரை ட்விட்டர் கணக்கில் மாற்றி தங்களுக்கு புதுவித உரையாடலை மேற்கொண்டனர். இது ட்விட்டரில் அப்போது மிகபெரிய பேசு பொருளாகவும் படத்திற்கு விளம்பரமும் கொடுத்தது.

அதன்படி வரும் ஏப்ரல் 28 ம் தேதி மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மீண்டும் நடிகர்கள் தங்கள் பெயரை கதாபாத்திரங்கள் பெயரை போல் மாற்றிக் கொண்டனர்.

அதில் நடிகை திரிஷா தன் பெயரை குந்தவை என்றும் ஜெயம் ரவி தன் ட்விட்டர் கணக்கு பெயரை அருள் மொழி வர்மன் என்றும் மாற்றி வைத்துள்ளனர். இதனையடுத்து ட்விட்டரின் புது வரையறை அடிப்படியில் பெயர் மாற்றம் செய்தால் ஜெயம் ரவி, திரிஷா ஆகியோரின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டு உள்ளது. ப்ளு டிக் பறிபோனதை பார்த்து அதிர்ந்த திரிஷா மீண்டும் தன் பெயரை Tris என்று மாற்றியுள்ளார். இருந்தும் அவரது ப்ளு டிக் மீண்டு வரமால் போனது. இதை பார்த்து ரசிகர்கள் ட்விட்டர் நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர். விரைவில் இருவரது ப்ளு டிக் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பொன்னியின் செல்வன் விளம்பர பணிக்காக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.