தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இந்த படம் 200 கோடிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.இந்த படத்தினை பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பிரம்மாண்ட படத்தினை வழங்கியதற்காக மணிரத்னம்,படக்குழுவினர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#PonniyinSelvan1 💪💪
Massive respect to The Great Kalki 🙏
Kudos to #ManiRatnam sir,all the technicians & actors for giving a scintillating experience👍❤️🙏
The scene where #Nandhini imagines herself on the throne was magical..spellbound in @arrahman sir’s music 👏👏❤️❤️

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 4, 2022