தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கி வருகிறார் மணி ரத்னம்.

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.

சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தன.சமீபத்தில் ஒரு பிரபல FMக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ர்ரஹ்மான் அளித்த பேட்டியில் இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் வேலைகள் துபாயில் நடந்து வந்தது விரைவில் படத்தின் வேலைகள் முடிந்து அப்டேட்கள் வரும் என்று தெரிவித்துள்ளார்

. @arrahman on #Ponniyinselvan

Get ready to witness ARR's masterpiece composition 🔥🔥✨✨#ARRahman pic.twitter.com/C876mtIcGe

— A.R.Rahman Fans (@ARRahmanFCtwt) March 21, 2022