தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.

சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இந்த படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது,இதில் முக்கிய படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.சீயான் விக்ரம் உடல்நிலை காரணமாக கலந்துகொள்ள முடியாமல் போனது.இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.தற்போது விக்ரமை டீஸர் விழாவில் மிஸ் செய்த ரசிகர்களுக்காக நாளை ஸ்பெஷல் ஆக ஒரு அப்டேட் வெளியிடுவதாக [படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விக்ரம் ரசிகர்களுக்காக பேசிய ஒரு ஸ்பெஷல் விடியோவா அல்லது விக்ரம் லைவ் வருகிறாரா அல்லது விக்ரம் படப்பிடிப்பில் இருந்து சில ஷூட்டிங் ஸ்பாட் விடீயோக்கள் அல்லது விக்ரம் கதாபாத்திரம் குறித்த ஒரு ப்ரோமோ வீடியோ டீஸர் ஏதேனும் ஒன்று ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Missed the Crown Prince at the event?
We have something special for you!

Tomorrow at 5 PM #PS1Teaser #PonniyinSelvan#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada!@madrastalkies_ #ManiRatnam @arrahman #Vikram @Tipsofficial pic.twitter.com/DyADtOG434

— Lyca Productions (@LycaProductions) July 12, 2022