இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்பயணத்தில் மணிமகுடமாக அமைந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். தனது கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்த மணிரத்னம் தற்போது ரசிகர்களுக்கு அதை விருந்தாக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு ஒரு சில குறைகள் இருந்தாலும் சிறந்த திரை அனுபவமாக பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றுள்ளது. புகழ்மிக்க எழுத்தாளர்கள் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பக்கங்களாக உருவான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மணிரத்னம் அவர்களுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் திரைக்கதை வசனத்தில் பணியாற்ற, தோட்டா தரணியின் பிரம்மாண்டமான கலை இயக்கமும், ரவிவர்மனின் அட்டகாசமான ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத்தின் அதிரடியான படத்தொகுப்பும் இந்த பிரமிக்க வைக்கும் படைப்பை உருவாக்கியது. குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் எக்கச்சக்கமான மாயாஜாலங்களை நிகழ்த்தி ரசிகர்களை மயக்கி இருக்கிறார்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, பொன்னியின் செல்வனின் முக்கிய கதாப்பாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏற்கனவே சில தினங்களுக்கு முன் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் 500 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அதை தாண்டி இன்னும் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் புதிய சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த பொங்கல் வெளியீடாக வெளிவந்த தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பாஸ்டராக அதிக வசூல் செய்திருந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்து தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…