தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர் பட்டியலில் ஒருவர் பா ரஞ்சித். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்திற்குப் பிறகு பிர்சா முண்டா என்ற வரலாற்று படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஹிந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாகுவதாகவிருந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளிவந்தன. அதன் பின் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களை தயாரித்தார்.

இதனையடுத்து இவர் இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். மூன்று கதாநாயகர்கள் கொண்ட இந்த படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் நடிக்கவிருக்கிறார்கள். குத்துசண்டையை மையப்படுத்தி இந்த படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் சல்பேட்டா என்பது நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாமுனி வெற்றிக்கு பிறகு இந்த படமும் ஆர்யாவிற்கு சீரான பெயரை வாங்கி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.