நடிகர் சிலம்பரசன்.T.R கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் & சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன்.

கடைசியாக நெட்ஃபிளிக்ஸில் வெளிவந்த பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப்சீரிஸில் “லவ் பண்ணா உட்ரணும்” எபிசோடை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. லைகா புரோடக்சன் தயாரிக்கும் #AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இளையதிலகம் பிரபு, கலா மாஸ்டர் ஆகியோருடன் இணைந்து பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். S.R.கதிர் ஒளிப்பதிவில் அனிருத் இசையமைத்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை நயன்தாரா, நடிகை சமந்தாவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக காதணியை கொடுத்துள்ளார். “அன்புள்ள கதீஜாவுக்கு கண்மணி இடமிருந்து” என குறிப்பிட்டு நயன்தாரா வழங்கிய அன்பு பரிசை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் இதோ…