சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.சுந்தர் சியின் அவ்னி ப்ரோடுக்ஷன் நிறுவனம் இந்த தொடரை தயாரித்திருந்தனர்.சுந்தர் சி இந்த தொடருக்கு கதை எழுதியிருந்தார்.ராஜ்கபூர் இந்த தொடரை இயக்கி இருந்தார்.பிரம்மாண்டமாக தயாரான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பானா நேரத்தில் TRP-யை அள்ளி வந்தது.

ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.நித்யா ராம்,மாளவிகா வேல்ஸ் இருவரும் இந்த தொடரின் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இந்த தொடரின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை முடிவு செய்தது.

இதனை அடுத்து ராகுல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.நித்யா ராம் திருமணம் செய்துகொண்டு தனது கணவருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.மாளவிகா மலையாளத்தில் ஒரு தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது இந்த தொடரின் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர்.ராகுல் ரவி மற்றும் நித்யாராம் ஒரு மலையாள படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படத்தின் போஸ்ட்டரை பகிர்ந்த ராகுல் விரைவில் இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Rahul Ravi (@rahul.ravi_)