கல்லூரியில் காதல் லீலை செய்த பேராசிரியை வீடியோவில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமாக்கலில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாக பணியாற்றும் பேராசிரியரும், பேராசிரியையும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரியில் பேசித் தீர்த்தத்துப்போக, மாலையில் வீடு திரும்பும்போதும் இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக்கொள்வது வழக்கம்.

அதன்படி, காதலனான பேராசிரியர், தனது காதலியானபேராசிரியையிடம் “உன்னை டாப்லெஸில் பார்க்க விரும்புவதாக, ஆடையை இல்லாமல் நிற்கச் சொல்லி வாட்ஸ்ஆப் காலில் பீடிகை போட்டிருக்கிறார். இதில், மயங்கிய பேராசிரியை, காதலன் சொன்னதுபோல், ஆடையின்றி வாட்ஸ்ஆப் காலில் தோன்றி, காதலனின் ஆசையைப் பூர்த்தி செய்துள்ளார்.

இதனை அவருக்குத் தெரியாமல் தனது செல்போனில் பதிவு செய்துகொண்ட காதலன், தன் கல்லூரியில் படிக்கும் சக மாணவனிடம் காட்டி உள்ளார்.

இதனை வாங்கிப்பார்த்த அவர், அந்த பேராசிரியை மிரட்டி, தினமும் வாட்ஸ்ஆப் காலில் வரச்சொல்லி ஆடையின்றி நிற்கச் செய்து, பேசி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், பேராசிரியை என்று கூட பாராமல், தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், பணம் கேட்டும் மிரட்டி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பேராசிரியை, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மாணவனையும், காதலனான கல்லூரி பேராசிரியரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களே இதுபோன்று காதல் லீலையில் ஈடுபட்டு, ஆபாச வீடியோவில் சிக்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.