நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள வாரிசு படத்தின் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தருனத்தில் பல இடங்களில் இருந்து வாரிசு படத்தை வரவேற்று கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. படத்தின் பாடல்கள் , டிரைலர் முன்னதாக வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. மேலும் தமன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் தெலுங்கிலும் தமிழிலும் வரவேற்பை பெற்று வருகிறது. பட்டி தொட்டி எங்கிலும் வாரிசு பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. வாரிசு படம் வெளியாக சில மணி நேரமே உள்ள நிலையில் வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

அதில் அவர், “விஜய் அண்ணா. வாரிசு படத்தின் அனைத்து உணர்ச்சிகரமான காட்சிகளையும் பார்த்து இதயத்திலிருந்து அழுதேன்.. கண்ணீர் விலைமதிப்பற்றது. வாரிசு படம் எனது குடும்பம்.. விஜய் அண்ணா எனது இதயத்தில் நெருக்கமானவர்.எனக்கு இந்த மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அண்ணா” என்று உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் தமனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமன் பதிவு மற்றும் படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களின் முந்தைய பேட்டிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் வாரிசு படம் குடும்பங்கள் மத்தியல் அதிகம் பேசப்படும்.அதிரடி தளபதியை குடும்பங்கள் கொண்டாடும் தளபதியாக பார்த்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போதைய வாரிசு அந்த குறையை தீர்த்து வைக்கும் என்றே குறிப்பிடலாம்.

இசையமைப்பாளர் தமன், தமிழிலும் தெலுங்கிலும் பல ஆண்டுகாலமாக பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீப காலமாக தமிழில் பெரிய அளவு வரவேற்பும் வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் தெலுங்கு திரையுலகில் தமனுக்கு எப்போதும் ஒரு மார்கெட் இருந்து வந்தது. சிம்பு படங்கள் மூலமாக கவனிக்கப்பட்டாலும் சமீபத்திய திரைப்படங்களில் தமன் இருப்பு இல்லாமலே இருந்தது. அவருக்கு நீண்ட நாள் கழித்து தமிழில் பெரிய நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்றால் அது கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘பிரின்ஸ் படத்தில் தான். படத்தின் தோல்வியில் பாடல்கள் பெரிதளவு பேசப்படவில்லை. ஆனால் பாடல்கள் ஓரளவு பெயர் பெற்றது. அதன் பின் கிடைத்த வாய்ப்பு தான் விஜயின் வாரிசு திரைப்படம்.

முதன் முதலாக உச்சநட்சத்திரத்துடன் தமிழில் இசையமைக்கும் தமன் மீது ஆரம்பத்தில் விமர்சனம் இருந்தாலும் வாரிசு படத்திற்கு அவர் இசையில் வெளி வந்த முதல் பாடல் ‘ரஞ்சிதமே பாடல் அந்த விமர்சனத்தை மாற்றியது. பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது, அதன் பின் சிலம்பரசன் குரலில் ‘தீ தளபதி அடுத்த ட்ரீட்டை தளபதி ரசிகர்களுக்கு கொடுத்தார். இதனையடுத்து அடுத்தடுத்த பாடல்கள், பின்னணி இசை மக்களிடம் வரவேற்பை பெற்றது.

தளபதி வாரிசு படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் தனது இரண்டவாது இன்னிங்க்ஸ் ஐ தொடங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது.