பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.கவின் கடந்த வாரம் ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இதனை தொடர்ந்து இந்த சீசனில் முதலில் வெளியேறிய பாத்திமா ,ரேஷ்மா,ஆனந்த் வைத்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் முகென் 100 நாட்களில் தனக்கு கிடைத்த அனுபவங்களை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.100 நாட்களில் நிறைய சந்தோசமான விஷயங்கள் நடந்துள்ளது அதற்கு ஒரு முக்கிய காரணம் சாண்டி தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.