பிரம்மாண்டமாக தயாராகி விரைவில் மக்களை மகிழ்விக்க காத்திருக்கும் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை படத்தின் இசையமைப்பாளரும் ஆஸ்கார் விருது வென்ற வருமான MM.கீரவாணி பகிர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் ஃபேவரட் நடன இயக்குனர் பிளாக்பஸ்டர் இயக்குனர் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் என பன்முக கலைஞராக தொடர்ச்சியாக தனது பிளாக்பஸ்டர் படங்களால் மக்களை மகிழ்வித்து வருபவர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்த ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் தான் சந்திரமுகி 2.

முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.

கதையின் நாயகன் நாயகியாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறைவடைந்தது. வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் MM.கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்தேன் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் மரண பயத்தில் தூக்கம் உள்ளாக இரவுகளை கடந்துள்ளனர். எனக்கும் கடந்த இரண்டு மாதங்கள் தூக்கமற்ற பகலும் இரவும் சேர்ந்து இந்த அட்டகாசமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் எனது முழு உழைப்பை கொடுத்திருக்கிறேன். எனது நண்பரான வித்யாசாகர் அவர்களே எனக்காக வாழ்த்துங்கள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்த பிறகு தனது முதல் விமர்சனத்தையும் படம் குறித்தும் அறிவித்திருப்பது தற்போது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் MM.கீரவாணி அவர்களின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…