தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல வருடங்களாக மக்கள் மனதில் ஆட்சி செய்து வருபவர் மெகாஸ்டார் சிரஞ்சீவி.தனது நடிப்பால்,நடந்தால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவருக்கு உலகமெங்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

2008-ல் இருந்து சினிமாவிற்கு பிரேக் விட்டு அரசியலில் இறங்கினார் சிரஞ்சீவி.சில வருடங்கள் உத்வேகமாக அரசியலில் இறங்கிய சிரஞ்சீவி பின்னர் மீண்டும் கத்தி படத்தின் ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தின் மூலம் சினிமாவில் தனது ரீ என்ட்ரியை கொடுத்தார்.கிட்டத்தட்ட 10 வருட இடைவேளைக்கு பிறகு வந்தும் சிரஞ்சீவிக்கான மவுசு குறையாமலேயே இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் நடித்த Sye Raa Narasimha Reddy படமும் பெரிய வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது,அடுத்ததாக வேதாளம் ரீமேக் Bholaa Shankar,மெகா 154 உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

தற்போது தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தனது சமூகவலைத்தள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.இவர் விரைவில் குணமடைய ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.

Dear All,

Despite all precautions, I have tested Covid 19 Positive with mild symptoms last night and am quarantining at home.

I request all who came in contact with me over the last few days to get tested too.

Can’t wait to see you all back soon!

— Chiranjeevi Konidela (@KChiruTweets) January 26, 2022