தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் மற்றும் தன் நடிப்பில் மக்களை பல ஆண்டுகளாக ஈர்த்தவர். தன்னை வருத்தி மக்கள் ரசனையை கொடுத்தவர் நடிகர் சியான் விக்ரம். கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு வருடம் முடிந்தும் படம் இவரது நடிப்பிர்காகவே கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் அசத்தியிருக்கும் கோப்ரா திரைப்படமும் கடந்த ஆண்டு வெளியானது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் விக்ரம் நடிப்பு பலரது பாராட்டை பெற்றது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பெருமைமிகு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து மிரட்டியிருப்பார் விக்ரம். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் முன்பு வெளியானது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தொடர்ந்து நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான்.

1800 ஆண்டின் காலக்கட்டத்தில் நடைபெறும் கோலார் தங்க சுரங்கம் கதைக்களத்தில் ஒரு பீரியட் திரைப்படமாக பிரம்மாண்டமாக தயாராகும் தங்கலான் திரைப்படத்தில் தற்போது விக்ரம் நடித்து வருகிறார், வித்யாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் படத்தின் முன்னோட்டம் வெளியாகி மிகபெரிய வரவேற்பு கிடைத்தது. தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக இந்த படத்தில் பாடல்கள் பின்னணி இசை மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது என்ற அறிவித்திருந்தார் ஜி வி பிரகாஷ். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு செய்கிறார் செல்வா.RK. சியான் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தில் அவருடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் திரைப்படத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக 3D ல் படம் வெளியாகவிருகின்றது.

இந்நிலையில் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தங்கலான் படம் குறித்த அசத்தலான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் மலையாளத்தில் நடித்து வெளியாகவிருக்கும் கிறிஸ்டி திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி ரசிகர்களுடன் #ASKMalavika என்ற பெயரில் இணையத்தில் பேசி வந்தார். அதில் ரசிகர் ஒருவர் மாளவிகாவிடம் “உங்களுடன் தோசை சாப்பிட வேண்டும்" என்று குறிப்பிட்டு கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா மோகனன் “நான் கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து விலகி, டயட்டில் இருக்கிறேன். தங்கலான் திரைப்படத்தில் எனக்கு கடுமையான சண்டை காட்சிகள் இருப்பதால், நான் ஒரே நேரத்தில் பயிற்சியும் எடுக்கிறேன். படப்பிடிப்பிலும் கலந்து கொள்கிறேன். நான் கார்போஹைட்ரேட் ரொம்பவே மிஸ் செய்கிறேன்.இப்போது இதை வாசிக்கும் போது கூட எனக்கு மசாலா தோசை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார்.

இதனையடுத்து ரசிகர்கள் அந்த பதிவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மாளவிகா மோகனன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பா ரஞ்சித் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கான சிறப்பு சண்டை காட்சிகளில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாளவிகா மோகனன் பிரபல மலையாள நடிகையாவார். இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிக பெரிய அளவில் புகழடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.