நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்த அஜித்குமார் - H.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படமும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று ஹாட்ரிக் ஹிட்டாகி இருக்கிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகி கொண்டாடப்பட்டு வருகிறது.

அஜித் குமாருடன் இணைந்து பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்ற, நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையலைத்துள்ளார். இதனிடையே ரிலீஸுக்கு பிறகு நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகை மஞ்சு வாரியர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது துணிவு திரைப்படத்தில் இந்த காட்சி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று நீங்கள் நடித்ததில் திருப்தி அடைந்த காட்சி என்றால் அது எது? எனக் கேட்டபோது, “நான் எப்போதுமே என்னுடைய காட்சிகளில் திருப்தி அடைந்ததே இல்லை. அது எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி. இந்தத் திரைப்படம் மட்டுமல்ல. துணிவாக இருந்தாலும் சரி, அசுரனாக இருந்தாலும் சரி, மலையாள திரைப்படங்களாக இருந்தாலும் சரி, எப்போதுமே சரி, இது நன்றாக இருக்கிறது எனத் தோன்றியது இல்லை. இதைவிட இன்னும் நன்றாக நடிக்கலாம். இதைவிட இன்னுமே சிறப்பாக செய்ய முடியும் என்று தான் தோன்றும். ஏன் துணிவு கூட அப்படித்தான்” என தெரிவித்துள்ளார். கலைஞர்களுக்கு இந்த திருப்தி அடைவது என்பதே இருக்காதா? எனக் கேட்டபோது, “மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது, ஆனால் என்னை பொருத்தவரை எனக்கு திருப்தியே ஆகாது” என பதிலளித்துள்ளார். இந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்க் கீழ காணலாம்.