கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் படமாகிறது இதனை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது.

இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு என்ற தகவல் கிடைத்துள்ளது.முதல்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.