வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று அறிவித்தார்கள். அதன் பிறகு STR படிப்பிடிப்புக்கு வராததால் அவரை படத்திலிருந்து நீக்குவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இந்நிலையில் சிம்பு மாநாடு படத்தில் மீண்டும் நடிக்கிறார் என்ற சுவையான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா உஷா ராஜேந்தர் அளித்த வாக்கை காப்பாற்ற சிம்பு மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க வேண்டும் என்கிற அவர் ரசிகர்களின் ஆசை நிறைவேறப் போகிறது.

நடிகர் சிம்பு 40 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்ய மாலை அணிந்து விரதத்தை நேற்று துவங்கினார். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கலந்துகொண்டார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இச்செய்தி அறிந்த STR ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.