17 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய ஜூஸ் கடைக்காரரின் கடையைப் பொதுமக்கள் அடித்துநொறுக்கினர்.

சென்னையைச் சேர்ந்த 36 வயதான முகமது அலி என்பவர், ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அந்த கடையை ஒட்டி உள்ள வீட்டில் 17 வயது சிறுமி பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையில், படித்துக்கொண்டிருந்த சிறுமியை, முகமது அலி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், கருவுற்று வெகு நாட்கள் ஆன பிறகே, சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் விபரம் கேட்டபோது, முகமது அலி தன்னை மிரட்டி இவ்வாறு செய்துவிட்டாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர்கள் அளித்த புகாரையடுத்து, கடந்த 25 ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் முகமது அலியைக் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, சிறுமியின் கருவைக் கலைக்க முடியாது என்றும், நாட்கள் கடந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஜூஸ் கடைக்காரரின் கடையைப் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.