தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார்.

இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக முதல் முறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கொரோனா காலகட்டத்தை மீறி மிகப் பெரிய பிளாக்பஸ்டராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்ததாக மாளவிகா மோகன் நடித்துள்ள மலையாள திரைப்படமான கிறிஸ்டி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskMalavika என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது மாஸ்டர் திரைப்படத்தில் சிறைக்கு சென்ற பிறகு JD மற்றும் சாரு கதாபாத்திரங்களின் நிலை கடைசியில் என்ன ஆனது? JD, சாருவை மீண்டும் சந்தித்தாரா? என கேட்டபோது, “கட்டாயமாக அவர் சந்தித்தார்! பின்னர் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம்” என நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். மாளவிகா மோகனின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…