பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று மூன்றாம் நாளான இன்று வெளியான முதல் ப்ரோமோவில், மஹத் மற்றும் யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். கடந்த சீசனில் யாஷிகா மற்றும் மஹத் கலந்துகொண்டனர் என்பது பிக்பாஸ் ரசிகர்கள் அறிந்தவையே.

கோல்டன் டிக்கெட்டை வென்று முகென் ராவ் மட்டும் இறுதிபோட்டிக்கு சென்றுள்ளார். நேற்று நடைபெற்ற செலோ டேப் கொண்ட டாஸ்கில் சாண்டி மற்றும் கவினை வீழ்த்தி முகென் ராவ் வெற்றி பெற்றார். மேலும் வீட்டில் ஒருவரை காப்பாற்ற நினைப்பவர்களுக்காக பச்சை மிளகாய் சாப்பிட்டனர் பங்கேற்பாளர்கள்.

இதுவரை ஷெரின், கவின், லாஸ்லியா ஆகியோர் எவிக்ஷனுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

#Day93 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/d13U1Ka5Ep

— Vijay Television (@vijaytelevision) September 24, 2019