மூதாட்டியைக் கூட விட்டு வைக்காமல் போதையில் வந்தவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் நரிக்குறவர் காலணி பகுதியைச் சேர்ந்த 72 வயதான மூதாட்டி பச்சையம்மாள், இரவில் தனது கணவருடன் வீட்டிற்கு வெளியே உறங்கி உள்ளார்.

அப்போது, நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவில் வந்த 2 போதை ஆசாமிகள், மூதாட்டி என்று கூட பார்க்காமல், அவரை கடுமையாகத் தாக்கிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், மூதாட்டியின் கை முறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் சக்கிமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குடிபோதையில் வந்து ஆசாமிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே, மதுரையில் 72 வயதான மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.