அடித்து கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம், சிவ்பூரி மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி திறந்த வெளியில் இயற்கை உபாதை கழித்ததாக, 12 வயது சிறுமியும், அவரது 11 வயது தம்பியும் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

இந்தநிலையில், அடித்து கொலை செய்யப்பட்ட சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகே அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், கொலை நடந்த இடத்தில், கொல்லப்பட்ட சிறுமியின் ஆடைகள் கிழிந்து கிடந்ததாகவும் அவரது மூத்த சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தன் தங்கையை அடித்துக்கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹக்கம் சிங் யாதவ், தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றொரு சிறுமிக்கு ஏற்கனவே பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாகவும் கூறி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த போலீசார், சிறுமியின் பிரேதப் பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அறிக்கை வந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதனால், சிறுமியின் மரணத்தில் குழப்பம் எழுந்துள்ளது.