மத்தியப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, நண்பர்களுக்குப் பள்ளிச் சிறுவர்கள் தாரைவார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் படித்து வரும் 14 வயது சிறுமியை, அதே பள்ளியில் படிக்கும் சக நண்பர்கள் 2 பேர், பரிசுப் பொருட்கள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த சிறுமியைக் கூட்டிச் சென்றதும், அந்த சிறுமியை ஆபாசமாகப் படம் பிடித்து, அந்த சிறுமியிடம் 2 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர்.

சிறுமியும், தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, அந்த 2 சிறுவர்களும், தங்களுடைய பணக்கார நண்பனிடம் அனுப்பி வைத்துள்ளனர். அந்த பணக்கார நண்பன், தனது பவரை பயன்படுத்தி அங்குள்ள லாட்சில் மேனஜரிடம் பேசி, அங்கே ரூம் போட்டு அந்த சிறுமியைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், பணம் தந்தால் தான் அனுப்புவோம் என்று மீண்டும் 2 சிறுவர்களும், அந்த சிறுமியை மிரட்டி உள்ளனர். இதனால், 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் தர அந்த சிறுமி சம்மதித்துள்ளார்.

பின்னர், அந்த சிறுமியுடன் சென்ற 2 பேரும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து, சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன், வீட்டிலிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், வீட்டிலிருந்த தங்க நகைகளையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீடு திரும்பிய சிறுமியின் அம்மா, வீட்டில் பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். ஆனால், சிறுமியோ அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சிறுமியின் 2 நண்பர்கள் மற்றும் அவர்களின் பணக்கார நண்பன் என 3 பேரையும் கைது செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.