பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

நேற்று கவின் பிக்பாஸ் வழங்கிய 5 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.இதனை அடுத்து லாஸ்லியா,கவின் உள்ளிட்டோர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.இதனை தொடர்ந்து தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் லாஸ்லியாவும்,தர்ஷனும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.கவின் பைனலில் இருந்திருக்கவேண்டிய ஒருவர் என்று லாஸ்லியா அவரை நினைத்து கண்ணீர் விடுகிறார் மேலும் தனக்கு பைனலுக்கு செல்ல விருப்பமில்லை என்றும் தெரிவிக்கிறார்.அவருக்கு அறிவுரை வழங்கும் தர்ஷன் 10 நாள் தான் இருக்கிறது அதற்கு பிறகு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்று கூறுகிறார்.