இந்தியாவில் திரைப்படங்களின் வியாபார ரீதியான போட்டி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. அந்த வகையில் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் சில தயாரிப்பு நிறுவனங்கள் சரியான படைப்புகளை மக்களுக்கு கொடுத்து அவர்களின் ஆதரவை பெற்று பொருளாதார ரீதியில் வெற்றி பெறுகின்றனர். அதன்படி கடந்த 2018 ல் கே.ஜி.எப் முதல் பாகத்தை தயாரித்ததில் மூலம் கவனம் பெற்ற தயாரிப்பு நிறுவனம் 'ஹோம்பாலே பிலிம்ஸ்' நிறுவனம். பான் இந்திய வெற்றியை கொடுத்த கேஜிஎப் - ன் அடுத்த பாகத்தையும் தயாரித்து 2022 ம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் தன் இருப்பையும் நிலைநாட்டியது. மேலும் அதே ஆண்டில் பல மொழிகளில் கவனம் ஈர்த்து அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்படத்தையும் தயாரித்தது ஹோம்பாளே நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அனைத்து மொழிகளிலும் கவனம் பெற்ற கேஜிஎப் 2, காந்தாரா படத்தை கொடுத்ததையடுத்து பார்வையாளர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கிரகந்தூர்.

அந்த அறிவிப்பில், “ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை மனமார தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாக மாற்றி நிறைவுடையாதாக அமைத்து கொடுத்த உங்களை பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு சிறப்பாக அமைந்ததற்கு உங்கள் அன்பும் ஆதரவும் தான் காரணம், அதற்காக மீண்டும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த உறவு என்றும் தொடர ஒன்றிணைந்து பல இலக்குகளை எட்டுவோம் என நம்புகிறேன் சினிமா என்பது பழங்காலத்திலிருந்தே வலிமையான பொழுதுபோக்கு ஊடகமாக இருந்து வருகிறது. அன்றிலிருந்தே அனைவராலும் பார்க்க பட்டு வரவேர்க்கபட்டு வருகிறது. எந்த ஒரு சூழலிலும் அதன் நேர்நிலை அல்லது எதிர்நிலை அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும் சினிமா ஒரு மகிழ்ச்சியையும் நிறைவையும் தரக்கூடிய ஊடகமாகவே இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியங்களாக இருந்து வருகிறது. சினிமா மூலம் நமது அடையாளங்களை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நம் இந்தியா நாட்டின் இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிகொண்டு வர இது ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது.

நாங்கள் இந்த புத்தாண்டை தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்க கூடிய மற்றும் என்றும் நினைவில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனுபவத்துடன் கொண்ட அழுத்தமான படைப்புகளை தயாரிக்கவிருப்பதாக உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதை மனதில் கொண்டு, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 3000 கோடி ரூபாயை பொழுதுபோக்கு துறையில் முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.

மேலும் இதனிடையே ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ திரைப்படத்தையும் நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் ‘டைசன்’ 777 சார்லி படத்தின் புகழ் ரஷித் ஷெட்டி இயக்கத்தில் ‘ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரகுதாத்தா’ போன்ற திரைப்படங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.