தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் மிஸ் இந்தியா,ஹிந்தியில் மைதான்,தமிழில் ரஜினியின் தலைவர் 168 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.இந்த விருதை என்னுடைய அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்.இந்த படத்தில் நான் ஒப்பந்தமாக முக்கிய காரணமாக இருந்த என்னுடைய மாமா கோவிந்திற்கு நன்றி.
இவை அனைத்திற்கும் காரணமான இயக்குனர் நாகி அவர்களுக்கு நன்றி.முக்கியமாக சாவித்ரி அம்மாவிற்கு மிக்க நன்றி எங்கள் பயணத்தில் எங்களுடன் இருந்து எங்களை ஆசிர்வதித்து இந்த படத்தை வெற்றியடைய செய்துள்ளீர்கள்.இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.