தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

விஜயுடன் இணைந்து இவர் இணைந்து நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளியை ஒட்டி வெளியாகவுள்ளது.தற்போது பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நயன்தாராவை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

தனக்காக மும்பை வரை வந்து நடித்துக்கொடுத்த சவுத் சூப்பர்ஸ்டார் நயன்தாராவிற்கு நன்றி என்று கத்ரீனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதனை அடுத்து நயன்தாரா ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.