துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்.முதல் படத்திலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.



இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் தயாரித்திருந்தார்.சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இதனை தொடர்ந்து கார்த்திக் நரேன் அருண் விஜய் நடிக்கும் மாஃபியா படத்தை இயக்கியிருந்தார்.



நரகாசூரன் படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் கார்த்திக் நரேன்.இந்த படம் மார்ச் 2020-ல் நிச்சயம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.