தமிழ் திரையுலகில் சீரான நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள கைதி படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ராஜு முருகன் கார்த்தியை இயக்கப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், ஜீவாவின் ஜிப்ஸி படத்தின் பணிகள் இருப்பதால், அது முடிந்த பிறகு அடுத்த படம் குறித்த அறிவிப்பை ராஜு முருகன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி கைவசம் சுல்தான், ஜீது ஜோசப் இயக்கும் ஓர் படத்திலும் நடித்து வருகிறார்.