கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனை தொடர்ந்து இவர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,லைலா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் அகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.ஏறு மயிலேறி என்ற இந்த பாடலை படத்தின் நாயகன் கார்த்தி பாடியுள்ளார் என சில புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளனர்.

The first song of #sardar will be sung by our #vandhiyathevan @karthi_offl … it’s an ode to our classical theatre performances … the song is a rural folk track named #ஏறுமயிலேறி #yerumayileri . @psmithran #princepictures @dhilipaction @geroge_dop @AntonyLRuben .. #yugabarathy pic.twitter.com/RvYfQQ4kAs

— G.V.Prakash Kumar (@gvprakash) October 7, 2022