உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கமல் போன்ற ஒரு மகாநடிகனுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் முக்கிய வேடங்களில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.மூன்று பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார்.

ஆங்கில படங்களை போல பல கைதி மற்றும் விக்ரம் படங்களின் கதைக்களம் இணைவது போல படமாக்கியுள்ளார் லோகேஷ்.பலரும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.இந்த படம் குறித்து தற்போது நடிகர் கார்த்தி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

படம் உண்மையிலேயே மிகப்பெரிய கமல்ஹாசனின் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.பல விறுவிறுப்பான கதைத்திருப்பங்கள் கொண்டு ஆச்சரியப்படுத்துகிறது.பஹத் பாசில் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் மிகப்பெரும் நடிகர்களாக அசத்தியுள்ளனர்.அனிருத் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.லோகேஷ் சொன்னது போலவே ஒரு ரசிகனாக சிறந்த படைப்பை கொடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

#Vikram - as mentioned by all, a true celebration of our @ikamalhaasan sir! It’s such a high to watch him kick up a storm. Action and visuals were racy with interesting connections and surprises throughout. #FahadFaasil never lets his intensity drop.

— Actor Karthi (@Karthi_Offl) June 6, 2022