பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.இந்த தொடரை அடுத்து விஜய் டிவியில் ஹீரோயினாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வந்தார் ரச்சிதா.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார்.

நடிகரும்,இயக்குனருமான குருப்ரசாத் நடிக்கும் கன்னட படத்தில் ரச்சிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் ரச்சிதா.சில தொடர்களில் ஸ்பெஷல் என்ட்ரியாக வந்து சென்றார் ரச்சிதா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

கலர்ஸ் தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய இது சொல்ல மறந்த கதை தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார் ரசித்தா.இந்த தொடரின் நாயகனாக விஷ்ணு நடிக்கிறார்.இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த தொடரில் புது என்ட்ரிகளாக நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சல்மா இருவரும் இணைந்துள்ளனர்,இவர்களது வருகைக்கு பிறகு தொடர் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Idhu Solla Marandha Kadhai (@solla_marandha_kadhai_)