பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பாங்கள் ஏற்பட்டு வருகின்றன.முகென் நேரடியாக பைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கவின் பிக்பாஸ் வழங்கிய 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நடைபெறும் என்று கமல் முதல் ப்ரோமோவில் அறிவித்தார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் ஷெரின் மற்றும் தர்ஷனிடம் ஷெரின் எழுதிய கடிதம் குறித்து கேட்கிறார்,ஷெரின் தர்ஷனுக்கு அதனை பற்றி தெரியவேண்டாம் என்று கிழித்துப்போட்டதாக சொல்கிறார் .அதற்கு தர்ஷன் கடிதத்தை படித்துவிட்டதாக சொல்லி வெட்கப்படுகிறார்.