தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.



KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது.



இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கல்யாணி ப்ரியதர்ஷன் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் யாராக இருக்கும் அவர்களை சிரிக்க வைக்கும் எனர்ஜி அவரிடம் உள்ளது.தன்னுடன் இருக்கும் அனைவரும் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று ஆசைப்படுபபவர் என்று பதிவிட்டுள்ளார்.