மாநகரம் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியாகி அசத்தியுள்ள படம் கைதி. இப்படம் முழுவதுமே இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் இதனை எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்துள்ளனர். இதில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியன், ரமணா, தீனா, தலைவாசல் விஜய், பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு தனது நன்றியை பதிவு செய்துள்ளார். இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் நடிகர் கார்த்திக்கும் நன்றி தெரிவித்தார். அனைவரது பாராட்டை பெற்ற டில்லி எனும் பாத்திரம் மீண்டும் வரும் என்று இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட்டை அளித்தார்.