குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து வயது ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராகவும் திகழும் நடிகர் ஜெயம் ரவி கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதையின் நாயகனான பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். தொடர்ந்து நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் ஜெயம் ரவியின் நடிப்பை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நிஜத்தில் அருள்மொழி வர்மன் இப்படித்தான் இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு கணக்கச்சிதமாக ஜெயம் ரவி நடித்துள்ளார் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

பொன்னியின் செல்வனை தொடர்ந்து இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் இறைவன், இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்.M இயக்கத்தில் JR30 என அடுத்தடுத்து வரிசையாக ஜெயம் ரவி நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி தனது வாழ்க்கை பயணத்திலும் தனது திரை பயணத்திலும் நடந்த பல சுவாரசியமான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவியுடன் அவரது மனைவி ஆர்த்தியும் கலந்து கொண்டார்.

அப்போது அவர்களிடம், “சென்னையில் நீங்கள் சாப்பிடுவதற்காக சென்ற ஏதாவது இடங்கள் பற்றி சொல்ல முடியுமா? உதாரணத்திற்கு சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினியுடன் சுவர் ஏறி குதித்து ஐஸ்கிரீம் சாப்பிட சென்றது போல..?” எனக் கேட்டபோது, “எங்கள் வாழ்க்கையில் நிறைய U-TURN தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். ஏனென்றால் செலிபிரிட்டி எங்கும் போய் சாப்பிட முடியாது. அப்போது காதல் வீட்டிற்கும் வெளியிலும் தெரியாத சமயம், யாராவது போட்டோ எடுத்துவிட்டார்கள் என்றால் வீட்டிற்கு தெரிந்து விடும் என்று காரிலேயே சென்று ஈசிஆரில் U-TURN அடித்து கொண்டிருப்போம்” என்றார் ஜெயம் ரவி. தொடர்ந்து ஆர்த்தி பேசுகையில், “மொத்த DATING-ம் வண்டியில் தான் இருந்தது. எங்கு போனாலும் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் எங்களால் போக முடியாது என்பதால் U-TURN அடித்து அடித்து வண்டியிலே தான் இருப்போம்.” என்றார்.

மேலும் ஜெயம் ரவி அவர்களிடம், “அது என்ன கார்?” எனக் கேட்டபோது, “அது நான் ஒரு ஹோண்டா சிட்டி வைத்திருந்தேன் கருப்பு கலரில் LIMITED EDITION. அதில் தான் சுத்துவோம். அதற்குப் பிறகுதான் BMW வாங்கினோம். அதில் தெரிந்தே சுத்தினோம்... ஏனென்றால் வீட்டில் தெரிந்து விட்டது." என்றார். அப்போது குறுக்கிட்ட ஆர்த்தி, "முதல் நாள் அவருடைய நண்பரின் வண்டியை கொண்டு வந்தார்... SANTRO தானே கொண்டு வந்தீர்கள்?" என ஜெயம் ரவியிடம் கேட்க, “ஆமாம் SANTRO அதை நண்பனிடம் கடன் வாங்கி கொண்டு வந்தேன். அவன் வண்டியை நன்றாக துடைத்துக் கொடுத்து, வாழ்த்தி அனுப்பினான். “உன்னுடைய காதல் வாழ்க்கை என் வண்டியில் தொடங்குகிறது.. நல்லா இருடா!” என சொல்லி அனுப்பினான்” என ஜெயம் ரவி தெரிவித்தார். இன்னும் பல கலகலப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஜெயம் ரவியின் அந்த முழு பேட்டி இதோ…