சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அடல்ட் காமெடி ஹாரர் பாணியில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தன.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். மேலும் இவரே படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். தற்போது ஹீரோயின்களாக கரிஷ்மா மற்றும் அக்ரித்தி சிங் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி தெரியவந்தது.

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் பிக்பாஸ் டேனியல், சாம்ஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.