ஹர ஹர மஹாதேவகி என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்தை தந்தார்.

இப்படத்தில், கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், ஷா ரா, வைபவி சாந்தில்யா, சந்திரிகா ரவி ஆகியோர் பலர் நடித்திருந்தார். அடுத்ததாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2- ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். நடிகர், நடிகைகள் யார் என்ற அறிவிப்பு நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வரும் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இச்செய்தி அறிந்த திரை விரும்பிகள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.