பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.

படத்தின் ட்ரைலர் மற்றும் ஓர் பாடல் சமீபத்தில் வெளியாகி டென்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்ற தகவல் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அட்டக்கத்தி தினேஷ் ரஞ்சித் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.