தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாகவும் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் திரைப்படமாகவும் உருவாகி வரும் திரைப்படம் சூர்யாவின் ‘சூர்யா 42’ தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிவா வுடன் கூட்டணி அமைத்திருக்கும் இந்த படத்திற்கு நாளுக்கு நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. காரணம் படத்தின் அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர். மிரட்டலான போர்களத்தில் போர் வீரர் போல் நிற்கும் சூர்யாவின் தோற்றம் ரசிகர்களை மிகப்பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீரியட் படமாகவும் நவீன காலம் சார்ந்த திரைப்படமாகவும் உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பத்தானி நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் குறிப்பாக பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

படத்தின் படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது முன்னதாக கோவா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவள்ளூரில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சூர்யா 42 படத்திற்கான டைட்டில் வெளியீடு பிரம்மாண்டமான வீடியோவுடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி சூர்யா 42 படத்தின் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 16 காலை 9.5 மணியளவில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களை குதுகலப்படுத்தியது மட்டுமல்லாமல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

படப்பிடிப்பு குறித்த தகவல்களை ரகசியாமாக பாதுகாத்து வரும் படக்குழு நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உயர்த்தி வருகிறது. முழு வீச்சில் படமாகி வரும் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்தாண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சூர்யாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றி பயணமாகவே இருந்து வருவதால் இந்த படத்திற்கும் தனி எதிர்பார்ப்பை திரையுலகமும் ரசிகர்களும் வைத்து வருகின்றனர்.