குஜராத்தில் கள்ளக் காதலில் ஈடுபட்ட இருவரைக் கிராம மக்கள் விநோதமான முறையில் தண்டித்தனர்.

குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டம் சஞ்சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் பரினிதி என்ற பெண்ணுக்குக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்திற்குப்பின் அந்த பெண், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரை ரகசியமாகக் காதலித்து வந்துள்ளார். இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, இருவரும் நள்ளிரவில் ஊரைவிட்டு ஓடியுள்ளனர்.

இந்நிலையில், சில வருடங்கள் கடந்த நிலையில் தற்போது, இருவருக்கும் சொந்த கிராமத்திற்குத் திரும்பி உள்ளனர். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியது. இதனையடுத்து, ஊரில் உள்ள சில முக்கியஸ்தர்கள், இருவருக்கும் வித்தியாசமான தண்டனை கொடுத்தனர்.

அதன்படி, அந்த காதலன், தன் கள்ளக் காதலியைத் தனது தோலில் உட்கார வைத்து, கிராமத்தைச் சுற்றி வரும் படி செய்தனர். அப்போது, இந்த ஜோடிக்கு முன்பும், பின்பும் கிராம மக்கள் புடை சூழ சென்று, அவர்களின் கள்ளக் காதலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இருவருக்கும் தண்டனை கொடுத்த கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கள்ளக் காதல் ஜோடி ஊர்வலம் செல்லும் வீடியோ காட்சிகள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.