ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பில் துரை இயக்கத்தில் உருவாகி வெளியான திகில் திரைப்படம் இருட்டு. திகில் கலந்த காமெடி படமான அரண்மனையின் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய சுந்தர்.சி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார்.

படத்தில் தன்ஷிகா, சாக்ஷி, வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். படத்தின் முக்கிய காட்சிகள் ஊட்டி, ஐதராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்பட்டது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார்.

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இப்படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தில் ஹீரோயினாக நடித்த சாக்ஷி சவுத்ரிக்கு இருட்டு படம் நடித்த பிறகு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதிலிருந்து சிறந்த படங்களை தேர்வு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.