தனது அன்பான ரசிகர்களுக்கு தொடர்ந்து நல்ல கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெரைட்டியான திரைப்படங்களை வழங்கி வரும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானதோடு விமர்சன ரீதியாகவும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ள, நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்திலும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

இந்த வரிசையில் முன்னதாக சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீடும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமத்தை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

We're Delighted to announce that @Suriya_offl 's #EtharkkumThunindhavan Entire Overseas Release by #HamsiniEntertainment 💥 #ET Grand Release on March 10th.. #ETOnMarch10th @sunpictures @pandiraj_dir #Sathyaraj @priyankaamohan @immancomposer @VinayRai1809 @sooriofficial pic.twitter.com/UD1UnW28FB

— Hamsini Entertainment (@Hamsinient) February 13, 2022