ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி பிரபலம் ஈரோடு மகேஷ் இந்த ஆண்டுடன் தனது 15 ஆண்டுகால தொலைக்காட்சி பயணத்தை அடியெடுத்து நிறைவு செய்துள்ளார். ஜோடி நிகழ்ச்சி தொடங்கி விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்சிகளில் பலவற்றில் பெங்கேடுத்து மக்களின் அபிப்ராயத்தை பெற்று இன்றும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் ஈரோடு மகேஷ். தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு மற்றும் கலக்க போவது யாரு ஆகிய நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தனது தொலைகாட்சி பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தற்போது இணைய ஊடகத்தில் பிரபலங்களாக வலம் வரும் கோபி சுதாகர் வளர்ச்சியை தடுத்த ஈரோடு மகேஷ் என்ற குற்றசாட்டு குறித்து கேட்கையில்,

"வளர்ச்சியை தடுக்குறதுலாம் இல்லை.. கோபி சுதாகர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தேனா? இல்லை அவங்களுக்கு நிகழ்ச்சி எதும் கொடுக்காதீங்க னு‌ சொன்னேனா? அப்படி எதுவும் இல்லை..அந்த நேரத்துல அந்த மேடையில நல்லா பண்ணவங்க தான் தேர்வு செய்யப்பட்டு அடுத்த கட்டம் போக போறாங்க.. இல்லை‌ன்னா நாங்க வெளியேற்ற‌ போறோம். இதுல எந்தவொரு விஷயமும் மனசுல கிடையாது. இப்போ உதாரணமாக கலக்கப்போவது யாரு 5 ல இறுதி கட்டத்திற்கு குரேஷி போகனும். அப்போ குரேஷிய தேர்வு செய்யல.. குரேஷி அன்னிக்கு ரொம்ப ரொம்ப நல்லா பண்ணிட்டார்.

நான் சொன்னேன் குரேஷிய இறுதி சுற்றுக்கு கொண்டு போகனும்னு அப்ப எல்லோரும் முடியாது னு சொன்னாங்க.. அந்த மேடையில இருக்க எல்லோருக்கும் தெரியும் அவர் நல்லா பண்ணாருன்னு.. நான் குரேஷியிடம் சொன்னேன், இன்னிக்கு நீ பண்ணது ரொம்ப ரொம்ப நல்லாருந்தது. நான் சேனல்‌கிட்ட பேசி எப்படியாவது உன்ன இறுதி மேடையில நடிக்க வைக்குறேன்னு சொன்னேன்.. அதேபோல் அவர் இறுதி சுற்று வந்தார் கலக்கப்போவது யாரு 5 ல டைட்டில் அடிச்சார்.

எனக்கு முன்ன குரேஷி யாருன்னே தெரியாது. தீனா, புகழ், பாலா விற்காக பேசிருக்கேன். கோபி சுதாகரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன் இரண்டு பேரும் நல்லா பன்றீங்க னு சொல்லி கட்டி பிடிச்சேன்.. இதுதான் நான். வெளியில இருந்து பார்த்தா இதெல்லாம் தெரியாது. எல்லோருக்கும் இத புரிய வைக்கலாம்னு அவசியம் இல்லை.. " என்றார் ஈரோடு மகேஷ்.

மேலும் ஈரோடு மகேஷ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு நேர்காணல் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..