இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதி உலகெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நாசர், பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட திரையுலகின் மிக முக்கிய நட்சதிரங்கள் நடித்த இப்படத்திற்கு உலகளவில் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 20 நாள் முடிவில் உலகளவில் 300 கோடி வசூல் செய்து சாதனையும் படைத்தது வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தி தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவரின் லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான அடையாறு, தி நகர், காரபாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோதமாக பணபரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் லைகா நிறுவனம் சார்ந்து வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்து விளக்கம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் ‘கத்தி’, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், 2.0, தர்பார், டான், பொன்னியின் செல்வன் 1 போன்ற பல வெற்றி படங்களை தயாரித்து இன்று திரையுலகமே வியந்து பார்க்கும் பல முக்கிய திரைப்படங்களை தயாரித்து முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. மேலும் தற்போது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களான இயக்குனர் ஷங்கர் உலகநாயகன் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தையும் மற்றும் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.