'விக்ரம்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் அவர்களுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் ‘லியோ. இப்படத்தில் விஜயுடன் இணைந்து கதாநயாகியாக திரிஷா நடிக்க இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் இப்படம் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. காஷ்மீருக்கு தனி விமானம் அமைத்து படக்குழுவினர் கடந்த மாதம் பறந்தனர். பின் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லியோ படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 11மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் பயங்கராமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் மேலும் இந்த நிலநடுக்கம் டெல்லி வரை 45 வினாடிகள் முதல் ஒன்றரை நிமிடம் வரை நீடித்ததாக தகவல் வெளியானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்தது. மேலும் அதே நேரத்தில் அருகாமை நாடுகளான பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் முகாமிட்டுள்ள லியோ படக்குழுவினருக்கு என்ன நேர்ந்தது என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப இதுகுறித்து லியோ பட எழுத்தாளரான இயக்குனர் ரத்தின குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "Bloody Earthquake" என்று பதிவிட்டுள்ளார்.

நிலநடுக்கத்தை உறுதி செய்த ரசிகர்கள் மேலும் படக்குழுவினரின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை இணையத்தில் வைத்து வந்தனர். இதனையடுத்து படக்குழுவினர், வடிவேலு காட்சியை பகிர்ந்து மீம் வடிவில் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா” என்று பகிர்ந்துள்ளனர். இந்த பதிவினை ரசிகர்கள் பகிர்ந்து தங்களை ஆஸ்வாசப் படுத்தி கொண்டுள்ளனர். மேலும் தளபதி விஜயின் காஷ்மீர் பிரிவு நிறைவடைந்து விட்டதாகவும் அதிகாலை சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

We are safe nanba 😇

- Team #LEO pic.twitter.com/WAOeiP94uM

— Seven Screen Studio (@7screenstudio) March 21, 2023