சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள், போடா போடி திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தால் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் ஏதும் இன்றி இருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு நானும் ரவுடி தான் படத்தில் கம்பேக் கொடுத்த விக்னேஷ் சிவன் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். தொடர்ந்து தன் பாணியில் அழகான ஃபீல் குட் படங்களாக தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என வரிசையாக அடுத்தடுத்து படங்களை கொடுத்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் அந்த புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, பிரபல யூடியூப் ஜோடியான ராம் மற்றும் ஜானு இருவரும் கலந்து கொண்டு நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் மற்றும் வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான கேள்விகளை கேட்டனர். அந்த வகையில், “நீங்கள் நயன்தாரா அவர்களை IMPRESS பண்ண என்ன செய்தீர்கள்? ஏனென்றால் இந்த கூட்டத்தில் பலரும் நயன்தாரா மாதிரி ஒருவரை IMPRESS பண்ண வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்... சொல்லுங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்?” எனக் கேட்டபோது, “யாராலயும் யாரையும் போய் IMPRESS பண்ண முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. அது தானாக நடந்தது அவ்வளவு தான். நீங்கள் அதற்காக திட்டம் எல்லாம் போட முடியாது. அல்லது ப்ரோக்ராம் செய்ய முடியாது.” என பதில் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம், “இல்லை உங்களுக்குப் பிடித்து என்ன செய்தீர்கள்... அந்த ஃபீல் வந்த பின் இந்த ஒரு விஷயம் பிடித்து செய்திருப்பீர்கள் அல்லவா? அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..." என கேட்டபோது, “அது தான் நான் சொல்கிறேன் அல்லவா என்னுடையை இயக்கம் தான்... அதைத்தான் சொல்ல வருகிறேன். நான் அந்த வேலையை செய்து கொண்டே இருப்பேன்.” என அவர் சொன்னதும், “அப்படி என்றால் உங்களுடைய DEDICATIONஐ பார்த்து நயன்தாரா IMPRESS ஆகியிருக்கிறார்” என ஜானு சொல்ல, “அப்படி என்றால் இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். பாருங்கள் எனக்கு நயன்தாரா மாதிரி ஒருவரை பிடிப்பது என்பது... கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுக்கும் அவரை பிடிக்கும். ஆனால் அவரை மாதிரி ஒரு நட்சத்திரத்திற்கு என்னை ஏன் பிடித்தது என்பது அவர்களுக்கு தான் தெரியும். எனவே அது எனக்கு தெரியாது. அதிர்ஷ்டமாக... ஆசிர்வாதமாக அமைந்தது அவ்வளவுதான்.” என பதில் அளித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.