தென்னிந்தியாவின் உச்ச நடிகர்களில் ஒருவரானவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல லட்சக் கணக்கான அளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அழகான இரட்டை ஆண் குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலுக்கு நேரில் சென்று வழிபாடு செய்தனர். அப்போது அந்த பகுதியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். சில மணி நேரம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. பின் அங்கிருந்து உடனே திருச்சியிலிருந்து சென்னை வரும் தேஜஸ் ரயிலில் பயணம் செய்து சென்னை வந்தடைந்தனர். லட்சக் கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் மக்களுடன் மக்களாக ரயில் பயணம் செய்தது சற்று பரபரப்பை ஏற்படுத்து அந்த தருணத்தில் இணையத்தில் பல சர்ச்சைகளுடன் நிறைய வதந்திகளும் பரவியது. திடீர் ரயில் பயணம் ஏன் என பலர் கேட்டிருந்த நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த ‘கேம் செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் குல தெய்வ கோயில் வழிபாட்டின் போது ரயில் பயணம் மேற்கொண்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன்,

"9.50 விமானம் தான் இருந்தது திருச்சியிலிருந்து அப்போ வீட்டுக்கு வர 11.30 லருந்து 12 ஆகிடும்.. பசங்க தனியா தூங்க மாட்டாங்க.. பசங்கள விட்டுட்டு வந்தோம்.. 6 மாச குழந்தைகள் கோயில்ல ரொம்ப கூட்டம் அதனால விட்டுட்டு வந்தோம். சரி வேறவழியில்லாம 5 மணி ரயில் ல வரலாம் னு முடிவு பண்ணோம். அங்க நிறைய கூட்டம் என்ன பன்றதுனே தெரியல.. எல்லாம் அன்பு தான் இருந்தாலும் மற்ற பயணிகளாம் இருந்தாங்க அவங்களுக்கு கொஞ்சம கஷ்டமா இருந்தது. அப்பறம் எப்படியோ ரயில் ல உட்கார்ந்தோம்.

ரயில் ல வரும் போது Name place animal thing, Bingo அதெல்லாம் விளையாடிட்டு வந்தோம். ரொம்ப நாள் கழிச்சு அதெல்லாம் ஜாலியா இருந்தது. நாங்க பொதுவாகவே சாதாரணமான வாழ்க்கையை தான் வாழ்கின்றோம். நான் இதை பெருமையாக சொல்ல வில்லை.. எங்களுக்கு அதுதான் வசதியும் கூட.‌.. இப்பவும் எங்களுக்கு பசிச்சா வைரமாளிகை னு ஒரு கடை இருக்கு அவங்க கிட்ட சொல்லி சாப்பாடு வாங்குவோம். நயன்தாராவிற்கு பரோட்டா, கலக்கி பிடிக்கும். கலக்கியிலும் சில விஷயங்கள் சொல்வாங்க.. நாங்கள் எளிமையாக வாழ விரும்புகிறோம். சில நேரம் ரொம்ப இடையூறா இருக்கும். பின்னாடி திடீரென கை வைப்பாங்க.. எதாவது ஒன்னு பண்ணும் போது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்.. சில நேரம் நாங்கள் அதை பொருத்திட்டுதான் ஆகனும்.." என்றார் விக்னேஷ் சிவன்.

மேலும் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..